districts

img

முதியோர், விதவை ஓய்வூதியத்தை மீண்டும் வழங்குக! மாதர் சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூன் 5 - நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர், விதவை  ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் வழங்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட் டம் திருவரங்குளம் ஒன்றிய மாநாடு வம்பன் நால்ரோட்டில் சனிக்கிழமை நடை பெற்றது. ஒன்றியத் தலைவர் பி.ஸ்டெல் லாமேரி தலைமை வகித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்டத் தலைவர் பி.சுசீலா பேசினார். வேலை அறிக்கையை ஒன்றியச் செயலாளர் கே.நாடியம்மை முன் வைத்தார். மாநாட்டை வாழ்த்தி மாவட்டச் செயலாளர் டி.சலோமி, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி ஆகியோர் பேசினர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து  மாநில செயற்குழு உறுப்பினர் பி.பூமயில்  உரையாற்றினார். மாநாட்டில் திருவரங் குளம் கிழக்கு, மேற்கு என இரண்டு கமிட்டி களாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு ஒன்றியத் தலைவராக எம்.அபிராமி, செயலாளராக பி.ஸ்டெல்லாமேரி, பொருளாளராக எஸ்.அன்னலெட்சுமி உள்ளிட்டோர் தேர்வு செய்யப் பட்டனர். மேற்கு ஒன்றியத் தலைவராக வி. கலைச்செல்வி, செயலாளராக பி.ஷோபனா, பொருளாளராக கே.நதியா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையைத் தடுத்து நிறுத்த வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒன்றியம் முழுவதும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க போர்க்கால அடிப்ப டையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அத்தியாவசியப் பொருட்களை யும் நியாயவிலைக் கடைகளில் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர், விதவை ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.