districts

img

30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பிரச்சனை எம்எல்ஏ எம்.சின்னத்துரை முன்னிலையில் தீர்வு

புதுக்கோட்டை, ஜன.31- கடந்த 30 ஆண்டு களுக்கும் மேலாக பட்டா கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த உடையநேரி காலனி  மக்களுக்கு கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பே ரவை உறுப்பினர் எம். சின்னத்துரை அதிகாரிகளு டன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் திங்கள்கிழ மையன்று தீர்வு காணப் பட்டது 1969-ஆம் ஆண்டு இலங்கை மலையகத் தமி ழர்கள் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டு பல் வேறு இடங்களில் குடிய மர்த்தப்பட்டனர். அதன்படி புதுக்கோட்டையை அடுத்த  உடையநேரியில் பகுதியில்  அரசால் இடம் ஒதுக்கிக் கொடுத்து குடியமர்த்தப்பட்ட னர். இலங்கையில் குளிர்பிர தேசத்தில் வசித்து வந்த அவர் களால் வெப்பம் நிறைந்த சமவெளிப்பகுதிகளில் வசிக்க முடியவில்லை. மேலும், அவர்களுக்கு பழகி யிருந்த தேயிலைத் தோட்ட  வேலைகளைத் தேடி தமிழ் நாட்டில் உள்ள மலையகப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்து விட்டனர். இந்நிலையில், பயன்பா டற்ற மேற்படி இடத்தில் அரு கில் உள்ள நந்தனவயல், பரி சக்கல், பள்ளத்துவயல், திரு வரங்குளம், ஆலங்குடி உள்ளிட்ட காலனிப் பகுதி களில் வசித்து வந்த ஏழை,  எளிய மக்கள் குடிசைபோட்டு குடியேறினர். காலப்போக் கில் புதுக்கோட்டை நகரத் தின் விரிவாக்கம் அதிகரிக் கும் போது உடையநேரிப் பகுதியிலும் குடிமனை களுக்காக விலை அதிகரித் தது. இதனால், மேற்படி இடங் களை ரியல் எஸ்டேட் கும்பல் வளைத்துப்போடத் திட்ட மிட்டனர். அதிகாரிகளின் உதவியோடு போலியாக பத்திரப் பதிவு செய்து பல  ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழை மக்களை மிரட்டி அப்புறப்படுத்தும் நடவ டிக்கையில் இறங்கினர்.

சிபிஎம் - மாதர் சங்கம் தலையீடு
இந்நிலையில்தான் மேற் படி பிரச்சனை அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத் தின் மூலமாக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கவ னத்திற்கு கொண்டுவரப்பட் டது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வேண்டி பல கட்டப் போராட்டம் நடைபெற்றது. மேற்படி உடையநேரி மக்களை சந்தித்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில  செயலாளர் கே.பால கிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயலா ளர் இரா.முத்தரசன், விடு தலை சிறுத்தைகள் கட்சித்  தலைவர் தொல்.திருமாவள வன் உள்ளிட்டோர் கடந்த காலங்களில் சந்தித்து தங்க ளது ஆதரவினைத் தெரி வித்துள்ளனர்.

காத்திருக்கும் போராட்டம்
பல ஆண்டுகளாக குடி யிருந்து வரும் ஏழை மக்க ளின் பக்கம் உள்ள நியா யத்தை உணராமல் தொடர்ந்து  அதிகாரிகள் அலட்சியம் தெரிவித்து வந்தனர். இதற் கிடையே ரியல் எஸ்டேட் கும்பலின் மிரட்டலும் அதி கரித்து வந்தது. இதனைத் தொடர்ந்து உடையநேரி பகுதி மக்களுக்கான மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் காத்தி ருக்கும் போராட்டம் அறிவிக் கப்பட்டது. ஜன.31 அன்று  கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்  எம்.சின்னத்துரை தலைமை யில் புதுக்கோட்டை கோட் டாட்சியர் அலுவலகம் முன்பாக இப்போராட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டது.

சமாதானப் பேச்சுவார்த்தை
திங்கள்கிழமை நடை பெற்ற போராட்டத்தைத் தொ டர்ந்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் அபிநயா தலைவர்களை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு  விடுத்திருந்தார். இதனை யடுத்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் அபிநயா தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி  சட்டப்பேரவை உறுப்பினரு மான எம்.சின்னத்துரை முன்னிலை வகித்தார். புதுக் கோட்டை வட்டாட்சியர் செந்தில்குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.அன்புமணவாளன், ஒன்றியச் செயலாளர் டி.லெட் சாதிபதி. ஜனநாயக மாதர்  சங்க மாவட்டச் செயலாளர் டி. சலோமி, தலைவர் பி. சுசீலா, சிபிஎம் மாவட்டக்குழு  உறுப்பினர் சி.மாரிக்கண்ணு, வாலிபர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் வெள் ளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோரிக்கைகள் ஏற்பு
பேச்சுவார்த்தையில், உடையநேரி காலனி பகுதி யில் வீடுகட்டி குடியிருந்து வரும் நபர்களுக்கு நிலுவை யில் உள்ள வழக்கில் அரசு  சார்பில் ஆஜராகி, பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பது. உடையநேரிப் பகுதி யில் அடுத்த மூன்று தினங்க ளுக்குள் தெருவிளக்கு அமைத்துக்கொடுப்பது என வும், அடுத்த ஒருவார காலத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்படும் எனவும், அனைத்து வீடுகளுக்கும் நிபந்தனையின் அடிப்படை யில் வீட்டு ரசீது மற்றும் வீடு களுக்கு மின் இணைப்பு வழங்குவது எனவும், மார்ச் மாத இறுதிக்குள் சாலை வசதி ஏற்படுத்தித் தருவது எனவும் அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை முடிவை  காத்திருக்கும் போராட்டத் தில் ஈடுபட்டு இருந்த மக்களி டம் சட்டப்பேரவை உறுப்பி னர் எம்.சின்னத்துரை அறி வித்தார். இதனைத் தொ டர்ந்து மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தங்க ளின் கோரிக்கைகளுக்காக கடைசிவரை களத்தில் நின்று போராடிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கும் நன்றி தெரி வித்தனர்.