அறந்தாங்கி, ஜூன் 9- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள பெருநாவலூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் இரா.கண்ணன் தலைமை வாகித்தார். சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் உதயம் சண்முகம் கலந்துகொண்டு, விளையாட்டு போட்டிக ளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். விழாவில், கல்லூரியின் துறைத்தலைவர்கள் முன்னிலை வகித்தனர். இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கல்லூரி ஆண்டு மலரை வெளியிட்டார். விழாவில் கலந்துகொண்ட தமிழக சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.கண்ணன் எழுதிய திருமுறை கண்ட புராணம், மாணிக்கவாசகர் வெண்பா, மாணிக்கவாசகர் சரித்திரக் கீர்த்தனை ஆகிய மூன்று நூல்களையும் வெளி யிட்டு பல்வேறு கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி விழாப்பேருரை ஆற்றினார். தமிழ்ச்சங்க நிறுவனர் எம்.ஜி.கே.நிஜாமுதீன், சென்னை வைணவக் கல்லூரி உதவிப்பேராசிரியர் முனைவர் சி.சதானந்தன், சென்னை மாநிலக் கல்லூரி உதவிப் பேராசிரி யர் முனைவர் த.மோகன்தாஸ், முனைவர் சி.குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் அறந்தாங்கி நகர்மன்றத்தலைவர் இரா.ஆனந்த், அறந்தாங்கி ஒன்றியப் பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவக் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.திருவாசகம் அனைவ ரையும் வரவேற்றார். ஆங்கிலத் துறை பேராசிரியர் ந.ஜீவ ரத்தினம் நன்றி கூறினார்.