districts

நாகர்கோவிலில் 19.8 மி.மீ. மழை

நாகர்கோவில், அக்.30- நாகர்கோவிலில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்  கெடுத்து ஓடியது. அசம்பு ரோடு கோட்டார் சாலைகளில் சாக்கடை நீருடன் மழை நீரும் ஆறாக ஓடியது. கொட்டாரம், மயிலாடி, சாமிதோப்பு, தக்கலை, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. நாகர்கோவிலில் அதிகபட்ச மாக 19.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி,  சிற்றார் அணை பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கேற்ப அணையில் இருந்து தண்ணீரை வெளி யேற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனால் குழித்  துறை ஆறு, கோதை ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்  பரப்பு அருவியை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. இதையடுத்து திற்பரப்பு அருவி யில் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள் ளது. ஞாயிறன்று அருவியல் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தி ருந்தனர். அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் ஏமாற்  றத்துடன் திரும்பி சென்றனர். பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் ஞாயிறன்று காலை 42.29 அடியாக இருந்தது.

அணைக்கு 897 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 383 கனஅடி தண்ணீர் மதகுகள் வழியா கவும் 2014 கனஅடி தண்  ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.50 அடியாக இருந்தது. அணைக்கு 479 கன அடி  தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை யில் இருந்து 800 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 12.33 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 12.43 அடியாகவும் உள்  ளது. 4 அணைகளின் நீர்மட்டமும் நிரம்பி வருவதையடுத்து நான்கு அணைகளுக் கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்  பட்டு உள்ளது. பொய்கை அணை நீர்  மட்டம் 16.10 அடியாகவும், மாம்பழத் துறையாறு அணை நீர்மட்டம் 38.30 அடி யாகவும், முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.40 அடியாகவும் உள்ளது.