districts

img

புதிய மின்மாற்றி அமைப்பு: நாகைமாலி எம்எல்ஏ பங்கேற்பு

நாகப்பட்டினம், ஜன.6- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட சோழவித்யாபுரம் ஊராட்சியில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்க, ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. மின்மாற்றியை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். சோழவித்யாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தமிழ்ச் செல்வி, சிபிஎம் மூத்த தோழர் எம்.நடராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர் பழனிவேலு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.