நாகப்பட்டினம், மே 7- நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் தில்லியில் உள்ள ஜஹாங்கிற்புரி பகுதியில் வசிக்கிற இஸ்லாமியர்களின் வாழ்விடங்களை இடித்த ஒன்றிய அரசின் அராஜக போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் ஒற்றுமை மேடை நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மதிமுக, சிபிஐ, விசிக, மமக, மஜக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். விதொச மாவட்டச் செயலாளர் எம்.முருகையன், சிறுபான்மையினர் நல குழு மாவட்டச் செயலாளர் என்.எம்.அபுபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ப.சுபாஷ் சந்திரபோஸ் நிறைவுரையாற்றினார். சிபிஎம் நகரச் செயலாளர் க.வெங்கடேசன் நன்றி கூறினார்.