districts

img

விவசாயிகள் சங்க மாநாட்டு விளக்கப் பேரவை கூட்டம் பெ.சண்முகம் பங்கேற்பு

நாகப்பட்டினம், மார்ச் 22- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய 35 ஆவது மாநாட்டின் விளக்கப் பேரவை கூட்டம் நாகை மாவட்டக் குழுவின் சார்பில் சாட்டியகுடியில் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் எம்.என்.அம்பிகாபதி தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், தொழிலாளர்கள் என அனைவரும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஏப்ரல் 5 அன்று தில்லி நாடாளுமன்றத்தை நோக்கிய போராட்டத்தை வலுவாக நடத்த வேண்டும். இதில் விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.  கிராமங்கள் தோறும் விவசாயிகள் சங்கத்தை விரிவுபடுத்த வேண்டும், கிராமங்களில் உள்ள விவசாயிகள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும், அனைத்து  வேளாண் விவசாய விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும், ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள மின்சார மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’’ என்றார். கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் வி.சுப்பிரமணியன், நாகை மாவட்டச் செயலாளர் கோவை.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.