மதுரை, ஜூலை 18 - கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். வெயிட்டேஜ் முறையால் 0.25 மதிப்பெண்களில் எனக் கான பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முது நிலை பட்டதாரி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. பின் தற்காலிக ஆசிரியர் தேர்வுக்கு பல வழிகாட்டுதல்களை அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், அதில் இடஒதுக்கீடு, முன்னுரிமை தொடர்பாக முறையான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. எனவே, தற்காலிக ஆசிரி யர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். நடவடிக்கைகளை தொடர இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு திங்களன்று நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தற்காலிக ஆசிரியர்களை நிய மிக்க மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி யுள்ளது. இதுபோன்று இரண்டு உத்தரவு கள் இருக்கும் போது, எதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆகவே, இதற்குத் தீர்வு காண்பது அவசியம். நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் போது, தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப் பட்டவர்கள் நிரந்தரப் பணி கோருவார்கள்? அரசுக்குப் பணம்தான் பிரச்சனை என்றால், தொகுப்பூதிய அடிப்படையில், ஆசிரி யர்களை நியமித்து, பின்னர் நிரந்தர ஆசிரி யர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்க லாம் எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, வழக்கில் இரண்டு மாறுபட்ட உத்தரவுகள் இருப்பதால், வழக்கை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக, இந்த வழக்கு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.