மதுரை, மார்ச் 15- எரிவாயு குழாய் பதிக்கும் நிலங்களுக்கான சமமான இழப்பீடு வழங்க வலியுறுத்தி போராடிய விவ சாயிகளை அழைத்துப் பேசுகிறோம் எனக் கூறிவிட்டு, மதுரை மாவட்ட நிர்வாகம் மதுரை கிழக்கு தாலுகா மாயாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ப.முருகன், முருகேசன், கிருஷ்ணன், பெருமாள், ஆர்.பாண்டியம்மாள், நல்லம்மாள், உமாவதி, ரமாதேவி ஆகியோரை கைது செய்து யா.ஒத்தக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அவர்கள் கோரிக்கைகளை பரி சீலிக்க மறுத்த மதுரை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து காலை, மதியம் இரண்டு நேரமும் உணவு உண்ண மறுத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நமது செய்தியாளரிடம் பேசுகையில், பட்டியலின மக்களுக்கு உரிய இழப்பீடு கிடைப்ப தற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் துணையோடு மேற்கொள்வோம் கைது நடவடிக்கை மூலம் நியாயம் கேட்கும் விவசாயிகளின் உரிமைகளை பறிக்க முடியாது என்றனர்.