districts

img

தனது முதல் வாக்குறுதியை நிறைவேற்றிய சிபிஎம் கரூர் மாமன்ற உறுப்பினர் தண்டபாணி

கரூர், மார்ச் 13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகராட்சி 41 ஆவது வார்டு உறுப்பி னர் எம்.தண்டபாணி திமுக  தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி யில் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.  அவர் தனது தேர்தல்  வாக்குறுதியில் அறிவித்த படி, 41 ஆவது வார்டு மக்கள்  தன்னை சுலபமாக சந்தித்து,  தங்களது கோரிக்கைகளை முறையிட ஏதுவாக அலுவல கம் ஒன்று திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், தனது  முதல் வாக்குறுதியை நிறை வேற்றும் வகையில் 41 ஆவது  வார்டு அசோக் நகரில் புதிய  அலுவலகத்தை திறந்துள் ளார். அலுவலக திறப்பு விழா வில் 41 ஆவது வார்டு மாமன்ற  உறுப்பினர் எம்.தண்டபாணி தலைமை வகித்தார். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கரூர் மாவட்ட செயலாளர் மா. ஜோதிபாசு அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். திமுக கரூர் தெற்கு நகர செயலாளர் சுப்பிரமணி பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.ஹோச்சுமின், மாநகர குழு உறுப்பினர்கள் ராஜேந் திரன், ராயனூர் கணேசன், சக்திவேல், 41 ஆவது வார்டு  திமுக செயலாளர் விஸ்வநா தன், கிளை செயலாளர் சதீஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.