காஞ்சிபுரம், நவ.18- சென்னையின் 2-வது விமான நிலை யம் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, எடையார்பாக்கம், தண்ட லம் உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. புதிய விமான நிலை யத்துக்கு விளைநிலங்கள் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறி விப்பு வெளியான நாளில் இருந்தே கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டத்துக்கு அரசியல் கட்சியின ரும் ஆதரவு தெரிவித்து வருகின்ற னர். ஏகனாபுரம் கிராமத்தில் பொதுமக்க ளின் போராட்டம் இன்று 116-வது நாளாக நீடித்து வருகிறது. பொது மக்களின் போராட்டம் நீடித்து வந்தாலும் பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கான பூர்வாங்க பணிகள் ஒருபுறம் நடந்து வருகிறது. மெட்ரோ ரயில் சேவையை பரந்தூர் வரை நீடிப்பது, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட ஆலோ சனைகள் தீவிரமாக நடந்து வரு கின்றன. இந்த நிலையில் புதிய விமான நிலையம் வருகை காரணமாக பரந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது. விமான நிலையம் திறக்கப்படும்போது பரந்தூர் பகுதி அதிக வளர்ச்சியில் இருக்கும் என்பதால் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதனை கணக்கிட்டு இப்போதே ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், பெருமுத லாளிகள், கிராம மக்களிடம் நிலத்தை மொத்தமாக வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் காரண மாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.2.40 லட்சமாக இருந்த 600 சதுர அடி நிலம் தற்போது ரூ.10 லட்சம் வரை விலை போகிறது. இந்த விலையை தாண்டியும் போகும் என்பதால் பலர் தங்களது நிலத்தை விற்காமல் காலம் தாழ்த்தி வரு கின்றனர். பரந்தூர் விமான நிலை யம் வருகையால் சென்னை-பெங்க ளூரு நெடுஞ்சாலையில் பல இடங்க ளில் இப்போது ரியல் எஸ்டேட் நிறு வனத்தினர் குடியிருப்பு பிளாட்டுகள் விற்பனை விளம்பரத்தை அதிகரித்து உள்ளனர். இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதிகளை சுற்றி உள்ள கிராமங்களில் நிலங்களை விற்பது தொடர்பாக பத்திரப்பதிவு துறைக்கு மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே சுற்ற றிக்கை அனுப்பி உள்ளார். தடை யில்லா சான்றிதழ் பெறாமல் எந்த பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என்று அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.