கடலூரில் வாண வேடிக்கை பட்டாசு தயாரிக்கும் குடோனில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் எம்.புதூரில் வாண வேடிக்கை தயாரிக்கும் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறின.
இந்த விபத்தில் சி.என் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ்(34), நெல்லிக்குப்பத்தை சேர்ந்த அம்பிகா(50), பெரியகாரைகாடு கிராமத்தைச் சேர்ந்த சித்திரா(35), ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பட்டாசு குடோனில் தொடர்ந்து வெடிகள் வெடித்து சிதறுவதால் அங்கு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.