districts

img

சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வில் சிறப்பிடம்

சிதம்பரம், ஜூன் 24- சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவிகள் காயத்ரி, மித்ரா தலா 493 மதிப்பெண்கள் பெற்று நகர அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.  அதேபோல் மாணவி சுபஸ்ரீ 489 மதிப் பெண்களும், அபிராமி, தினேஷ் குமார் 488 மதிப்பெணிகளுடன் மூன்றாமிடமும், அஞ்சா, கிருஷ்ணா, தீபிகா, இலக்கியா மற்றும் சுபரஞ்சனி 486 மதிப்பெண்க ளுடன் நான்காம் இடத்தையும் பிடித்துள்ள னர். மேலும் 36 மாணவர்கள் 450 மதிப்பெண்க ளுக்கு  மேல் எடுத்துள்ளனர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி புவனேஸ்வரி, மாணவர் ரூபன் கார்த்திக் இருவரும் தலா 586 மதிப் பெண்கள் எடுத்து சிதம்பரம் நகர அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். மாணவிகள் காயத்ரி, சௌமியா ஆகியோர் 585 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், மாணவி மீனாட்சி  579 மதிப்பெணிகள் பெற்று மூன்றாம் இடத்தையும் ,  மற்றும் சண்முக பிரியா, ரஞ்சனி ஆகியோர் 578 மதிப்பெண்களுடன் 4 ஆவது இடம் பிடித்துள்ளனர்.  14 மாண வர்கள் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்திருக்கும் மாணவர்களுக்கு பள்ளி யின் தாளாளர் குமார், முதல்வர் ரூபியால் ராணி ஆகியோர் ரொக்கப் பரிசாக முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ. 10 ஆயிரம்,  இரண்டாவது இடத்திற்கு ரூ. 5 ஆயிரம், மூன்றாவது இடத்துக்கு ரூ. 3 ஆயிரம் ரொக்கமும் கேடயமும் வழங்கிக் கவுரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் அறிவழன், பள்ளியின் ஆசிரியர்க ளும் கலந்து கொண்டனர்.