districts

img

விஷவண்டு கடித்து கர்ப்பிணி உட்பட 7 பேருக்கு தீவிர சிகிச்சை

சிதம்பரம், மார்ச். 29- சிதம்பரம் அடுத்துள்ள தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட  பகுதியில்   விஷ வண்டு (கதன்டு) கடித்ததில் கர்ப்பிணி பெண் உட்பட 7 பேர்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சிதம்பரம் அருகே  தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட  ஓமக்குளம்  தச்சன் தெருவில் புதன்கிழமை அன்று  விஷ வண்டுகள்  அப்பகுதி மக்களை திடீரென தாக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்  விசவண்டிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள தெருக்களிலும், வீடுகளிலும் ஓடி தப்பிக்கமுயன்றனர்.  இதில் 7பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்தவர்கள் வலியால் துடித்தவர்களை  சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.  இதில் ஓமக்குளம் தச்சன் தெருவை சேர்ந்த 5மாத கர்ப்பிணியான ஆர்த்தி (23), அதே தெருவை சேர்ந்த வளர்மதி(34), தியாகராஜன்(38), புவனேஸ்வரி(31), கமலா, வனிதா, மதன் ஆகியோர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனையறிந்த மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் தச்சம்குளம் தெருவில் உள்ள புளியமரத்தில்  கூடுகட்டியுள்ள அந்த விஷ வண்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் அப்பகுதி புளியமரத்தில் உள்ள விஷ வண்டுகளை தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடனடியாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.