ஈரோடு, ஜன.29- குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த மனித உரு வில் வாழும் மிருகங்களை கண் டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பொது மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டி யில் மனித கழிவுகளை கலந்த நபர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீண்டாமை கொடு மைக்கு எதிராக போராட்டம் நடத் திய, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர்களை காவல் துறை யினர் கைது செய்ததை கண்டித் தும், மனித கழிவுகளை கலந்த குடி நீர் தொட்டியை உடனடியாக இடிக்க வேண்டும். ஊர் பொது மக்கள் அனைவரும் பயன்படுத் தும் வகையில், புதிய குடிநீர் நீர் தேக்க தொட்டியை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் நாமக்கல் மாவட்டம், வசந்த் நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலி பர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.லட்சுமணன் தலைமை வகித் தார். இதில், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கௌசல்யா, பள்ளிபாளையம் ஒன்றிய செயலா ளர் எம்.நவீன், துணைத்தலைவர் ரவீன், ஒன்றியக்குழு உறுப்பினர் கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விசிக ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டம், பவானி, அந் தியூர் பிரிவில் விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு விசிக பவானி சட்ட மன்ற தொகுதி செயலாளர் இல. ஆற்றலரசு தலைமை வகித்தார். மக ளிர் விடுதலை இயக்க மாவட்ட துணைச்செயலாளர் சுப்புலட்சுமி வரவேற்றார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ஜெகநாதன், தாலுகா செயலாளர் ஏ.மாணிக்கம், விசிக மாவட்ட பொருளாளர் விஜய பாலன், மாவட்ட செயலாளர் பெ. சா.சிறுத்தை வள்ளுவன், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் மாதேஸ் வரன், திரைப்பட இயக்குநர் சிபிச் சந்தர், வழக்கறிஞர் சிவராமன், தமிழ் புலிகள் வேங்கை பொன்னுசாமி உள்ளிட்ட பலர் கண்டன உரையாற் றினர். முடிவில், கிறித்தவ சமூக நீதி பேரவை அமைப்பாளர் மெடிக் கல் ராஜா நன்றி கூறினார்.