districts

வத்தலக்குண்டு: எரிவாயு தகனமேடை அமைக்க  ரூ.1.49 கோடி நிதி ஒதுக்கீடு  

சின்னாளப்பட்டி,மார்ச் 3- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டம் தலைவர் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.  துணைத் தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் வெங்கட்ரமணன் வரவேற்றார். தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி தீர்மான அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் வத்தலக்குண்டுவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் எரிவாயு தகன மேடை அமைக்க ஒரு கோடியே 49 லட்சம் நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்  நிறைவேற்றப் பட்டது.