சேலம், டிச.4- சேலத்தில் 1174 பேர் ஒரே யோகா சனங்களை செய்து சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். யோகாசனத்தின் பயன்கள் மற்றும் பிட் இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில், உலக சாதனை முயற்சிக் காக நாடு முழுவதும் 390 தனியார் பள்ளி களை சேர்ந்த ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவ, மாணவிகள் 15 நிமிடத்தில் 40 யோகாசனங்களை செய்து சாதனை படைக்கும் நிகழ்வு 7 மாநிலங்களில் நடை பெற்றது. அதன் ஒரு பகுதியாக சேலம் குரங்கு சாவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யோகாசனம் நிகழ்வில் 1174 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 15 நிமிடத்தில் 40 யோகாசனங்களை செய்தனர். இதேபோல், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தில்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் 190 மையங்களில் நடைபெற்றது. இந்த யோகாசன நிகழ்ச்சியில் அமர்ந்த நிலையில் 20 யோகாசனங்களும், நின்ற நிலையில் 20 யோகாசனங்கள் என 40 யோகாசனங் களை பள்ளி மாணவ, மாணவிகள் குறிப் பிட்ட நேரத்தில் செய்து முடித்தனர். இம் முயற்சிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு ஆசியா உலக சாதனை புத்தக ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.