districts

ஈஷா யோக மையத்தில் யானை தாக்கி இருவர் படுகாயம்

கோவை,ஜன.27– கோவை ஈஷா யோகா மையத்தில் கணவன், மனைவி ஆகிய இருவரும் காட்டு யானை தாக்கி படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆலாந்துறையை அடுத்த முட்டத்துவயல் பகுதியில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி  மலையையொட்டிய அடர்ந்த வனப் பகுதியில் யானைகளின் பிரதான வழித் தடத்தில் யோகா மையம் அமைந்திருப்ப தால் காட்டு யானைகள் நடமாட்டம் எப் போதும் இருக்கும். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடாச்சலம் மற்றும் அவரின் மனைவி சரோஜா ஆகிய இருவரும் செவ்வாயன்று ஈஷா யோகா மையம் சென்றுள்ளனர். அப்போது அங்கே  வந்த காட்டு யானை தாக்கியதில் இருவ ரும் படுகாயமடைந்தனர்.

 இதையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை  சாய்பாபா காலனி அருகே உள்ள தனியார்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போளுவாம்பட்டி வனத்துறை யினர் மற்றும் ஆலாந்துறை காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.