அடிப்படை வசதிகள் இன்றி இருளில் தவிக்கும் மக்கள்
தஞ்சாவூர், நவ.11- கஜா புயலால் பாதிக்கப் பட்ட கிராம மக்கள் ஓராண் டாகியும் மின் இணைப்புக் கிடைக்காததால், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆதார் அட்டைகள் உள் ளிட்டவற்றை ஒப்படைப்ப தற்காக திங்கள்கிழமை வந்தனர். ஒரத்தநாடு அருகே யுள்ள ஒக்கநாடு மேலையூர் யாதவர் தெருவைச் சேர்ந்த சுமார் 50 பேர் மாவட்ட ஆட்சி யரகத்துக்கு திங்கள்கிழமை வந்தனர். திடீரென தர்ணா வில் ஈடுபட்ட இவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை, பாடப் புத்த கங்கள் ஆகியவற்றை திரும்ப ஒப்படைப்பதற்காக வந்துள்ளதாகத் தெரி வித்தனர். ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் யாதவர் தெரு வில் கஜா புயலின் போது மின் கம்பங்கள் சாய்ந்து, மின் இணைப்புத் தடைபட்டது. இதே போல, சாலையும் சேத மடைந்தது. ஆனால், ஓராண் டாகியும் இதுவரை மின்சா ரம் வழங்காமல், சாலை வசதி செய்து கொடுக்காமல் மாவட்ட நிர்வாகம் பழி வாங்குகிறது. இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்ட முயற்சி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தினோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எங்களால் இனி மேல் இருளில் வாழ முடி யாது. இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் தொல்லையால் பாடம் படிக்கவோ தூங்கவோ முடியவில்லை. எனவே, ஆட்சியரிடம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்கா ளர் அடையாள அட்டை, பள்ளிக் குழந்தைகளின் பாட புத்தகங்கள் ஆகியவற்றை ஒப்படைப்பதற்காக வந்தோம். மாவட்ட ஆட்சியர் செவ் வாய்க்கிழமைக்குள் மாவட்ட வருவாய் அலுவல ருடன் நேரில் வந்து பார்வை யிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த தன் பேரில் ஊருக்கு திரும்புகிறோம்” மக்கள் கூறினர்.