districts

img

மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட இளைஞரின் உடலுக்கு மரியாதை!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுக்கா கடத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடுமலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிர்பாராதமாக விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் ராஜா தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில் கார்த்திக் ராஜாவின் உடல் உறுப்புகள் இன்று தானம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அவரது உடலுக்குத் தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் அரசு மரியாதை அரசு மரியாதை செய்தனர். பின்னர் அவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.