districts

img

அதிகாரிகள் அலைகளிக்கிறார்கள்:ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளி பெண் தர்ணா

இலவச பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்க அதிகாரிகள் அலைகளிப்பதாக கூறி போத்தனூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வறுமையில் வாழும் வீடற்ற மக்களுக்கு சூரிய மின்சக்தி உடன் கூடிய விளக்குகள் அமைத்து முதலமைச்சரின் பசுமை வீடு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன் கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த டெய்லரிங் ஆசிரியராக உள்ள தேன்மொழி என்ற மாற்றுதிறனாளி பெண் விண்ணப்பம் செய்துள்ளார். தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து 5முறை மனு அளித்துள்ளார்.  இந்நிலையில் அதிகாரிகள் வீடு ஒதுக்கி  தருவதாக உறுதியளித்து பல முறை திருப்பி அனுப்பிவிடுவதாகவும்,இதுவரை தனக்கு   வீடு கிடைக்கப்படவில்லை எனவும், தன்னை மாற்றுதிறனாளி என்றும் பாராமல் அலைகளிக்கப்படுவதாக கூறி திங்களன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமர்ந்து கண்ணீர் மல்க தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அங்கு வந்த போலீசார் மற்றும் மாற்று திறனாளி அலுவலர் தேன்மொழியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீடு பெற்று தருவதாக உறுதியளித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்குள் அழைத்து சென்றனர்.

அவரிடம் மாவட்ட ஆட்சியர் சமீரன் வீடு ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.