திருப்பூர், நவ.14- திருப்பூர் மாநகராட்சி ஆணையா ளராக எஸ்.ராமமூர்த்தி வியா ழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண் டார். சென்னையில் நகராட்சிகள் நிர் வாக கூடுதல் இயக்குனராகவும், சென்னை நதிகள் புனரமைப்பு அறக்கட்டளையின் திட்ட இயக் குனராக செயல்பட்டு வந்த எஸ். ராமமூர்த்தி திருப்பூர் மாநக ராட்சி ஆணையராக கடந்த செவ்வாயன்று நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மாநகராட்சி மைய அலுவ லகத்தில் பொறுப்பேற்றார். அப்போது மாநகராட்சி துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.