நிவாரணம் வழங்க கோரிக்கை
திருநெல்வேலி, மே 15- கொரோனா ஊரடங்கு எதிரொலி யாக குறைந்த விலைக்கு கரும்புகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால் செலவு செய்ததை கூட ஈட்ட முடியவில்லையே என்று விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். நெல்லை மாவட்டம் பாபநாசம், அனவன்குடியிருப்பு உள்ளிட்ட பகு திகளில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடி யாக, பெரும்பாலான விவசாயிகள் கரும்பு பயிரிடுவது வழக்கம். இந்த ஆண்டு அப்பகுதியில் சுமார் 100 ஏக் கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். 10 மாத பயிரான கரும்பினை தைப்பொங்கல் பண்டி கையை முன்னிட்டு, பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்து விற்ப னைக்கு அனுப்புவார்கள். மேலும் சிலர் கோடை காலத்தில் கரும்பு சாறு கடைகளுக்கு விற்பனைக்கு அனுப் பும் வகையில், மார்ச், ஏப்ரல் மாதங்க ளில் அறுவடை செய்து அனுப்பு வார்கள். அதேபோன்று கடந்த பொங் கல் பண்டிகையை முன்னிட்டு, பெரும் பாலான விவசாயிகள் கரும்பினை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பினர். சில விவசாயிகள் கோடை காலத்தில் கரும்பு சாறு கடை களுக்கு விற்பனைக்கு அனுப்பும் வகையில், அறுவடை செய்ய திட்ட மிட்டு இருந்தனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனி னும் விவசாய பணிகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு, பல்வேறு தொழில்கள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன. எனினும் டீக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரி கள், குளிர்பான கடைகள் போன்றவற் றில் பார்சல் மட்டுமே வழங்க அனு மதிக்கப்பட்டு உள்ளது. மேலும், சாலையோரங்களில் கரும்பு சாறு கடைகள் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான வியாபாரிகள், கரும்பு சாறு கடைகளுக்கு கரும்பினை கொள் முதல் செய்வதற்கு முன்வரவில்லை.
இதனால் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு கரும்பை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்ற னர். கடந்த முறை 15 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.250-க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட் டது. ஆனால், தற்போது ஒரு கட்டு கரும்பு ரூ.130-க்கு தான் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஒரு ஏக் கர் கரும்பு பயிரிடுவதற்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்ப தற்கு ரூ.20 ஆயிரம் வரையிலும் செல விட்ட விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளனர். செலவு செய்த பணத்தைகூட ஈட்ட முடியவில்லையே என்று வேதனை அடைகின்றனர். இதேபோன்று பாபநாசம் பகுதி யில் ஏத்தன் ரக வாழை பயிரிட்ட விவ சாயிகளும், அறுவடை செய்த வாழை க்கு போதிய விலை கிடைக்கப் பெறா மல் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கரும்பு, வாழை விவசாயிகளுக்கு அரசு நிவா ரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.