சிதம்பரம், மே 13- சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் உள்ள உழவர் சந்தையை தமிழக வேளாண் மற்றும் ஊரக நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெள்ளியன்று (மே 13) ஆய்வு செய்தார். அப்போது சிதம்பரம் மேல வீதியில் இடநெருக் கடியால் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் அமைப்பது குறித்து அலுவ லர்களுடன் ஆலோச னையில் ஈடுபட்டார். அத னைத் தொடர்ந்து சிதம்பரம் நகரின் நீர் ஆதாரமாக விளங்கும் வக்கராமரி ஏரியை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக வக்கரா மாரி ஏரியில் இருந்து சிதம்ப ரம் நகருக்கு குடிநீர் எடுத்து செல்ல முடியாமல் இயந்திரங்கள் பழுதாகி கிடப்பில் போடப்பட்டுள் ளது. தமிழக மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் வகையில் வக்கரா மாரி ஏரியில் இருந்து சிதம் பரத்திற்கு குடிநீர் எடுத்து செல்லும் வகையில் ரூ 5 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட் டுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்தவுடன் இதற்கான பணிகள் தொடங்கப்படும். சிதம்பரம் அண்ணாமலை நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் ரூ. 328 கோடி தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அதற் கான பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அதேபோல் வடக்கு பிரதான சாலையில் உள்ள உழவர் சந்தையில் நவீன காய்கறி மார்க்கெட் அமைப்பதற்காக 5 கோடியே 70 லட்சம் செலவில் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் விரை வில் தொடங்கும். உள்ளாட் சித் தேர்தல் முடிந்த பிறகு அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிடிக்கப்படும் முதலைகள் இந்த ஏரியில் விடப்படுகிறது. இதனை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தனியாக முதலைப்பண்ணை ஒன்று அமைத்து அதன் மூலம் முதலைகளை பாதுகாக்கப் படும் என்றார். மாவட்ட ஆட்சியர் பால சுப்பிரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், கோட்டாட் சியர் ரவி, நகராட்சி ஆணை யர் அஜிதா பர்வீனா, நகர் மன்றத் தலைவர் செந்தில் குமார் துணைத்தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.