விழுப்புரம், மார்ச் 29- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - நகரி, ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு, நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் புதனன்று (மார்ச்29) திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் வட்டத் தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் சாமி நடராஜன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் ஆர்.தாண்டவராயன், மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன்,மாவட்டப் பொருளாளர் பி.சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்திற்குட்பட்ட 12 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் விவசாயிகளின் நிலங்கள், திண்டிவனம் - நகரி - ரயில் பாதை அமைக்கும் திட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர். நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு 10 ஆண்டுக்கு முன்பு இருந்த அரசின் வழிகாட்டுதல் மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்கியிருப்பது நியாயமற்றது. ஒன்றிய, மாநில அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் கொடுக்கும் விவ சாயிகள், மீண்டும் வேறு இடத்தில் நிலம் வாங்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது, அதனால் தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் 10 மடங்கு கூடுதலாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட வீடு, கிணறு, மரம் உள்ளிட்டவைகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் மாவட்ட துணைத்தலை வர் கே.கோவிந்தசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ஜி.ஏழுமலை, வட்டச் செய லாளர் பி.ராமகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.பி.யுவராஜ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். இதனை தொடர்ந்து கோரிக்கை அடங்கிய மனுக்களை சார் ஆட்சியர் அலு வலகத்தில் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர்.