மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஆவடி மாநகராட்சி 10ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அ.ஜான் வீதி வீதியாகச் சென்று ஆதரவு கோரினார். இதில் திமுக பகுதிச் செயலாளர் பேபி சேகர், வட்டச் செயலாளர் உதயகுமார், வட்ட பொறுப்பாளர் துருவன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.பூபாலன், எம்.ராமகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.சுந்தரராஜ், கே.ரவிச்சந்திரன், ஆர்.கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருவொற்றியூர் 4ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.ஜெயராமன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இதில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், சரவண தமிழன், மாவட்டக் குழு உறுப்பினர் பாக்கியம், திமுக அவைத் தலைவர் சோமசுந்தரம், வட்டச் செயலாளர் பவுல், வழக்கறிஞர் அரி, எர்ணாவூர் கிராமத் தலைவர் ராம்குமார், காங்கிரஸ் வட்டச் செயலாளர் டி.மணி, மதிமுக வட்டச் செயலாளர் அருள், விசிக வட்டச் செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.