விழுப்புரம், செப். 16- விழுப்புரம் அருகே மாம் பழப்பட்டு அலமேலுபுரம் ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் மினி லாரி ஓட்டுநர் பரத் (22). இவர் வெள்ளிக்கிழமை அதி காலை வண்டிமேடு பகுதி அருகே இயற்கை உபாதை கழித்துவிட்டு பின்னர் அதே பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக விழுப்புரத்தி லிருந்து திருப்பதி நோக்கி செல்லும் ரயில் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பரத் சம்பவ இடத் திலே பலியானார். இது குறித்து விழுப்புரம் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.