சென்னை, பிப். 23 - சென்னை மாநகராட்சிக்கான வாக்குப்பதிவு பிப்.19ஆம் தேதி நடைபெற்றபோது திமுக பிரமுகர் நரேஷை தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனையடுதது நரேஷ் அளித்த புகாரின்பேரில் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல்துறையினர் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ஜெயக்குமார் தொடர்ந்த மனு ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்பு விசாணைக்கு வந்தது. கொலை முயற்சி பிரிவு 307, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக கையாளுதல் பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயக்குமார் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.