districts

img

பொதுத்துறை சொத்துக்களை விற்க டிஆர்இயூ மாநாடு எதிர்ப்பு

சென்னை, ஏப். 11- பணமாக்கல் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவன சொத்துக்களை விற்கக் கூடாது என டிஆர் இயூ மாநாடு வலியுறுத்தி யுள்ளது. தட்சிண ரயில்வே எம்ப் ளாயிஸ் யூனியன் (டிஆர் இயூ) சென்னை டிவிஷன் 24ஆவது மாநாடு சென்னை ஓட்டேரியில் உள்ள ஏ.பி.  நினைவகத்தில் நடை பெற்றது. பொதுச் செயலாளர் மாத்யூ சிரியக் மாநாட்டை துவக்கி வைத்தார்.செயலா ளர் பாபு செயலாளர் அறிக் கையையும், பொருளாளர்  அருண்குமார் செழியன் வரவு செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். தலைவர் என்.அபிமன்யு, துணை பொதுச் செயலாளர் பேபி ஷாகிலா, வி.அரிலால், இணை பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், செயல் தலைவர் அ.ஜானகிராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து துணைத்  தலைவர் ஆர்.இளங்கோ வன் பேசினார். சென்னை டிவிஷன் தலை வராக சிவாஜி, செயலாள ராக எஸ்.அருண்குமார் செழியன், பொருளாளராக எஸ்.பொன்னன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ரயில்வே, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும், பண மாக்கல் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவன சொத்துக்களை விற்காதே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை  கட்டுப்பத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.