தமிழகத்தில் புதிதாக 1000 பேருந்துகளை கொள்முதல் செய்யவும், 1000 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. இதன்படி, 420 கோடி ரூபாயில் விழுப்புரம் கோட்டத் திற்கு 180, சேலம் கோட்டத்திற்கு 100, கோவை கோட்டத்திற்கு 120, கும்பகோணம் கோட்டத்திற்கு 250, மதுரை கோட்டத்திற்கு 220, திருநெல் வேலி கோட்டத்திற்கு 130 என பேருந்து கள் வழங்கப்பட உள்ளன. பேருந்தின் அடிச் சட்டம் நல்ல நிலையிலுள்ள 1000 பழைய பேருந்து களை புதுப்பித்திட (கூடு கட்ட) 130 கோடி ரூபாய் தேவை. இதில் அரசின் நிதியாக 80 கோடி ரூபாயும், எஞ்சிய 50 கோடி ரூபாயை அந்தந்த போக்குவரத்துக் கழகங்களும் ஏற்க வேண்டும் என்று போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவங்கரன் தெரிவித்துள்ளார். புதிய பேருந்துகளை வாங்கவும், புதுப்பிக்க வும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப் பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், போக்குவரத்து கழகங்கள் மிகக் கடுமை யான நிதி நெருக்கடியில் உள்ளன. தொழி லாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, கூட்டுறவு சங்கம், எல்ஐசி, பிஎல்ஐ, வருங்கால வைப்பு நிதி போன்றவற்றிற்கு செலுத்த வேண்டிய 11,000 கோடியை நிர்வாகங்கள் செலவிட்டுள்ளன.
எனவே, அந்த பணத்தை செலுத்தாமல் உள்ளன. இத்தகைய கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிற நிலை யில், பழைய பேருந்துகளுக்கு கூடு கட்ட ஆகும் செலவில் 50 கோடி ரூபாயை போக்கு வரத்து கழகங்கள் ஏற்க வேண் டும் என்பதில் நியாயம் இல்லை. 11 ஆயிரம் பேருந்து கள் சேவை நோக்கோடு வருமானம் இல்லாத வழித் தடங்களில் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக மிகப்பெரிய நிதி நெருக்கடியில் போக்கு வரத்து கழகங்கள் உள்ளன. நிதி நெருக்கடி காரணமாக, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2015 ஆம் ஆண்டு நவம்பர் முதல் அகவிலைப்படி உயர்வை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 1 கோடியே 70 லட்சமாக நடப்பாண்டில் உயர்ந்துள்ளது. உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றின் காரணமாகவும் நிர்வாக செலவினம் அதிகரித்துள்ளது. போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கி ஈடுகட்ட வேண்டும் என்று 2013 ஆம் ஆண்டு முதல் சிஐடியு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன்படி அரசு செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம்.