districts

img

மெட்ரோ ரயில் வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனத்தில் ஆட்கள் அமர அனுமதி மறுப்பு

சென்னை, ஏப். 10- சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடம் கட்டண முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.  மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகள் இங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று வருகின்றனர். இதற்கு கட்டண மாக 6 மணிநேரத்துக்கு இருசக்கர வாக னங்களுக்கு ரூ.20, காருக்கு ரூ.30 வசூ லிக்கப்படுகிறது. இவ்வாறு வாகனம் நிற்கும் இடத்தில் சிலர் ஜோடியாக வாக னத்தில் வந்து, கட்டணத்தை செலுத்தி விட்டு மணிக்கணக்கில் பேசிக் கொண்டி ருப்பதும் தகாத செயல்களில் ஈடுபடு வதும், சிலர் வாகனங்களின் உள்ளே இருந்து கொண்டே புகை பிடிப்பதும், மது அருந்துவதும் என பல்வேறு அசம்பா விதங்கள் நடந்தன. இதனால் அங்கு பல்வேறு பிரச்சினைகள் உருவானது. இத னால் ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.  இதுகுறித்து மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதையடுத்து  அனைத்து வாகன நிறுத்தும் இடத்திலும் வாகனத்தை நிறுத்தி விட்டு உரிமையாளர்கள் வெளியில் சென்று விட உத்தரவிடப்பட்டது. வாகனத்தில் அமர்வதற்கு யாருக்கும் அனுமதியில்லை என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலிலும் வைத்துள்ளனர்.