districts

கூவம் ஆற்றங்கரையில் அலையாத்தி காடுகளை உருவாக்க பணி தீவிரம்

சென்னை,டிச.23-  கூவம் ஆற்றங்கரைகளை பலப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் அலை யாத்தி காடுகளை உருவாக்கும் பணி தீவிர மாக நடைபெற்றுவருகிறது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக் கட்டளை நிதியின் கீழ், அடையாறு, கூவம் போன்ற ஆற்றங்கரைகளில் ஆக்கிர மிப்புகளை அகற்றி, கரைகளை சமப்படுத் துதல், திடக்கழிவுகளை அகற்றுதல், மரக் கன்றுகளை நடுதல் மற்றும் தடுப்பு வேலிகளை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன் அடிப்படையில், சென்னை மாநக ராட்சிக்கு உட்பட்ட அடையாறு ஆற்றங்கரை யில் திரு.வி.க. நகர் பாலம் முதல் எம்.ஆர்.டி.எஸ். பாலம் வரை ரூ.5.4 கோடி யில் நடைபாதை அமைத்தல், 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் நடை பெற்று வருகிறது.  மீனம்பாக்கம் விமான நிலைய ஓடு தளம் அருகே உள்ள மேம்பாலம் முதல் நந்தம்பாக்கம் பாலம் வரை இடதுபுறத்தில் 13 ஆயிரத்து 456 மரக்கன்றுகள் நடவும், நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரை 14 ஆயிரத்து 300 மரக்கன்று கள் நடவும், காயிதே மில்லத் பாலம் முதல் லாஸ் பாலம் வரை 15 ஆயிரம் மரக்கன்று கள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.