districts

திருவள்ளுவர் நகர் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க ஆட்சியர் உத்தரவு

சென்னை, ஜூன் 21 - சென்னை மாநகராட்சி, 98வது வட்டம், திருவள்ளு வர் நகர் குடியிருப்பு மக்க ளுக்கு பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார். வில்லிவாக்கம் சட்ட மன்ற தொகுதி, 98வது வட்டம், திருவள்ளுவர் நகர் பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றன. இந்த பகுதியில் குடியிருக்கும் மக்களிடம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் தவணைத் தொகையை முழுமையாக பெற்றுக் கொண்டு, கிரயப் பத்திரம் வழங்கி உள்ளது. தற்போது இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதியை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி செல்வா, 98வது வட்ட மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி, வில்லிவாக்கம் பகுதி நிர்வாகிகள் வி.டில்லி பாபு, மார்ட்டின், சலோமி, ஏ.எல்.மனோகரன் ஆகி யோர் மனு அளித்தனர். அதில், அரசாணை எண்  621, தேதி 1.10.2021, வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை  ஆணையின் அடிப்படை யில், திருவள்ளுவர் நகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் என்று  கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வா தெரிவித் தார்.