districts

img

திடீர் நகர் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு மாநகராட்சி ஆணையரிடம் சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 31 – எழும்பூர் திடீர் நகர் மக்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  எழும்பூர் பகுதி, 99வது வட்டம் திடீர் நகரில் 800 குடும்பங்களை சேர்ந்த சுமார் 3ஆயிரம் பேர் வசிக் கின்றனர். இதற்கேற்ப அங்கு கழிப்பிட வசதி இல்லை. தற்போதுள்ள கழிப்பிடமும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் மக்கள் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே, தற்போதுள்ள கழிப்பி டத்தை சீரமைக்க வேண்டும். கழிவு நீர் குழாய் அடைப்புகளை சரி செய்ய வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய கழிப்பிடம் கட்ட வேண்டும், மக்கள் வசிக்கும் அதே இடத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேலாண்மை வாரி யத்தின் மூலம் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டிதர வேண்டும் என வலி யுறுத்தி வெள்ளியன்று (மார்ச் 31) திடீர் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் கிளைச்செய லாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, பகுதிச் செயலாளர் கே. முருகன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் வே. ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை ஆணை  யர் ககன்தீப் சிங் பேடியை, மாவட்ட செய லாளர் ஜி செல்வா, 98வது மாமன்ற உறுப்பினர் ஆ.பிரிய தர்ஷினி உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட ஆணையர், அடுக்கு மாடி குடியிருப்பு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப் படும் என்றார். மேலும், பொது கழிப்பிடத்தை உடனே சீரமைக்க அதிகாரி களுக்கு உத்தர விட்டார்.