districts

ரம்பத்தால் மனைவி, மகன், மகளை கொன்று ஊழியர் தற்கொலை

சென்னை, மே 28- சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஷ்வரா நகர்  விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது41). இவர்  தனியார் ஐடி நிறுவன ஊழியர். இவரது மனைவி காயத்ரி (39). இவர்களது  மகள் நித்யஸ்ரீ (13), மகன் அரிகிருஷ்ணன் (9). இவர்களில் நித்யஸ்ரீ அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பும், அரிகிருஷ்ணன்  4-ம் வகுப்பும் படித்து வந்தனர். வெள்ளிக்கிழமை இரவு பிரகாஷ் குடும்பத்தினருடன் தூங்கச் சென்றார். சனிக்கிழமை  காலையில் அவர்களது வீட்டு கதவு திறக்கப்பட வில்லை. வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. நீண்ட நேரம்  ஆகியும் அவர்கள் வெளியே வராததால் அக்கம்பக்கம் வசித்தவர்கள் பிரகாசின் வீட்டுக்கு சென்றனர். வீட்டு கதவை தட்டியபோது யாரும்  திறக்கவில்லை. இதையடுத்து அவர்கள் ஜன்னல் வழியாக வீட்டுக்குள்  எட்டிப் பார்த்தபோது வீட்டுக்குள் பிரகாஷ், காயத்ரி, குழந்தைகள் நித்யஸ்ரீ,  அரிகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மரம் அறுக்கும் ரம்பத்தால் அவர்களின் கழுத்து அறுக்கப்பட்டி ருந்தது. வீடு முழுவதும் ரத்தம் வழிந்தோடி காணப்பட்டது. போலீசார் 4 பேரின் பிணங்களையும் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.