திருவள்ளூர், ஜூலை 6- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள முத்துரெட்டி கண்டிகையில் அமைந்துள்ள பாரத் பெட்ரோலியம் கம் பெனி சுற்றுச்சுவர், நாகத்தம்மன் கோயில் இடையே அமைந்துள்ள சாலையை பன்நெடுங்காலமாக சிறுபுழல்பேட்டையில் உள்ள அரசு பள்ளிக்கு மாணவர்கள் பயன் படுத்தி வந்தனர். அந்த வழியை மின்வாரியம் கையகப் படுத்தி உயர் மின்னழுத்த கம்பங்களை அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாரத் பெட்ரோலியம் அருகில் உள்ள வழியினை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் சிப்காட் வட்டாட்சியர் ஆகியோரிடம் கிராம மக்கள் போராடி அனுமதி பெற்றனர். இந்நிலையில் அந்த வழியை மறித்து பாரத் பெட்ரோலியம் மறித்து வேலி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. 5 கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர் கள் சென்று வரும் பாதையை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட அலுவலர் அந்த சாலையை ஊராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.