ராணிப்பேட்டை,ஜன. 27- நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் அனைத்து பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரியும், அவுட்சோர்சிங் முறையை கைவிடக் கோரி யும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் மற்றும் துப்பு ரவு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வாலாஜா நக ராட்சி அலுவலக வாயி லில் வெள்ளியன்று (ஜன. 27) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நகராட்சி சங்கத் தலை வர் எஸ்.முரளி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் எம்.காசி, துணைத் தலைவர் என்.காசிநாதன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கள் எஸ்.பரசுராமன், அ.தவராஜ், துணைச் செய லாளர் எ.பி.எம்.சீனிவாசன், துணைத் தலைவர் வி.குபேந்திரன், வாலாஜா தாலுகா செயலாளர் ஆர்.மணிகண்டன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் நிர்வாகி கள் கே.ஆஷா, கே.வேலு, பாக்யராஜ், ஜெம்ஸ், ஜெயந்தி, ஏ.எம்.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.