districts

img

திருமண உதவி திட்டத்தை தொடர்ந்து வழங்குக விவசாயத் தொழிலாளர் சங்க விழுப்புரம் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

விழுப்புரம், அக். 26- திருமண உதவித் திட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் விழுப்புரம் வட்ட 10ஆவது மாநாடு காணையில் வட்டத் தலை வர் சி.அழகுநாதன் தலைமையில் நடை பெற்றது. வட்ட பொருளாளர் ஆர்.ராம மூர்த்தி வரவேற்றார். மாவட்டத் தலை வர் வி.அர்ச்சுணன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்டச் செய லாளர் கே.சுந்தரமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.கலியமூர்த்தி, சிபிஎம் வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நூறு நாள் வேலைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், திருமண உதவித் திட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்க வேண்டும், காணை ஒன்றியம், கோனூர், பள்ளியைத்தூர் உட்பட பல்வேறு கிராமங்க ளில் பழுதடைந்த கிராம நிர்வாக அலுவ லகங்களை புதுபிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
12 பேர் தேர்வு கொண்ட வட்டக்குழுவுக்கு தலைவராக சி.அழகுநான், செய லாளராக ஆர்.ராமமூர்த்தி, பொருளாளராக கே.பிரபாகரன் ஆகியோர் செய்யப்பட்டனர்.