districts

சென்னை மற்றும் புறநகரில் பார்கள் மூடல்

சென்னை,செப்.2- சென்னை மற்றும்  புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடை களுடன் இணைந்து பார்க ளின் அனுமதி காலாவ தியானதால் மூடப்பட்டன.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள பார்களின் டெண்டர்  காலம் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடி வடைந்தது. இதற்கிடையே இந்த பார்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஏலம் விடப்படாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பார்களை நடத்துவதற்கு அரசு சமீபத்தில் டெண்டர் கோரியது. ஆனால் இந்த டெண்டர் செயல்முறை வெளிப்படையானதாக இல்லை என்பதால் டெண்டர் முடிவை அறி விக்க சென்னை உயர்நீதி மன்றம்  ஆகஸ்டு 30-ந் தேதி வரை தடை விதித்திருந்தது. இதையடுத்து டாஸ்மாக் பார்களுக்கு இதுவரை டெண்டர் விடப்படவில்லை. டெண்டர் காலம் ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிந்ததால் பார்களை செயல்பட அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தர விட்டுள்ளது. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன.