சிதம்பரம், மார்.25- சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் யாரும் ஏறக்கூடாது என கோவில் தீட்சிதர்கள்அறிவித்தனர். ஆனால் தீட்சிதர்களின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதைத்தொடர்ந்து பக்தர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தீட்சிதர்களுக்கு எதிராகவும், சிற்றம்பல மேடையில் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனையடுத்து, சிதம்பரம் கோட்டாட்சி யர் ரவி 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார். அதில், சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பொது மக்களுக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதுகுறித்த நீதிமன்ற ஆணைகள் மற்றும் அரசாணைகள் தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிகழ்வு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பேரில் இறுதி முடிவு எடுக்கும் விதமாக பல்வேறு நிலை சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை கள் நடைபெற்று வருகிறது. எனவே அரசின் முடிவை எதிர்நோக்கி உள்ள நிலை யில் அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள் மற்றும் இதர பல்வேறு போராட்ட குழுவினர் அரசின் முடிவு வரும் வரையில் எவ்வித போராட்டங் களும், ஆர்ப்பாட்டங்களும், கூட்டமாக கூடி ஆலோசனைகளையும் மேற்கொள்ள கூடாது. இதனால் ஒரு மாத காலத்திற்கு குற்றவியல் நடைமுறை சட்டம் 144-ன்படி தடைஉத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்து. இந்த உத்தரவு மார்ச் 24 ஆம் தேதி முதல் நடைமுறைபடத்தப்பட்டது. இந்த நிலையில், உரிமைக்கு போராடி னால் 144 தடை உத்தரவா? மாவட்ட நிர்வாகம் தீட்சிதர்களுக்கு ஆதரவா? என குரல் எழுப்பி யது சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கோட்டாட்சியர் ரவி மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல் படியும், பொதுமக்கள் நலன்கருதி சிதம்பரத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.