செங்கல்பட்டு, மார்ச் 20 - புதிரை வண்ணார் இன வரைவியல், நரி குறவர் இன வரைவியல் போன்ற புத்தகங்களை எழுதியவரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினருமான எழுத்தாளர்.எஸ்.கே. அந்தோணிபால் எழுதி தமிழ்நாடு அரசினால் சிறந்த நூலுக்கான விருதினை பெற்ற பறை யர் ஆட்சியும், வீழ்ச்சியும் என்ற நூல் வெளி யிட்டு விழா ஞாயிறன்று (மார்ச் 19) செங்கல்பட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் வீரராகவன் தலைமை யில் நடைபெற்றது. விழாவில் மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர். க.ஜெயந்தி வரவேற்றார். லயோலா கல்லூரி மாற்கு நூல் வெளியிட்டு கருத்துரை வழங்கினார். தமிழ்நாடு பத்திரிகையாளர் எழுத்தாளர் பேரவையின் பொதுச்செயலாளர் யாக்கன் நூலை பெற்றுக்கொண்டு மதிப்புரை வழங்கி னார். மக்கள் வழிகாட்டி இயக்கத்தின் மாநில தலைவர் தீ.கி.ராஜேஷ், மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர். ப.சு.பாரதி அண்ணா, எழுத்தாளர் யாழன்ஆதி, முனைவர் இ.அந்தோணிராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் புத்தர் ஒளி பன்னாட்டு பேரவையின் மாநில மூத்த ஆலோசகர் கவிஞர்.நா.வீரமணி, ததீஒமு மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன், பொருளாளர். அ.ராமலிங்கம், எஸ்சி.எஸ்டி. நலச்சங்க செயலாளர்கள் செங்கை எஸ்.தாமஸ், ஏ.கிருஷ்ணன், எழுத்தாளர் த.வெற்றி, விடுதலை சிறுத்கைள் கட்சி நிர்வாகிகள் கோ.தம்பிராஜ், தமுஎகச மாவட்ட துணை செயலாளர் மு.முனிச்செல்வம், திரெமென்`ஹீர் பவுண்டேசன் தலைவர் அசோக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் எஸ்.கே.அந்தோணிபால் ஏற்புரை வழங்கினார். ஒய். ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.