அரியலூர், டிச.16- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள நைனார் ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு மழை காலங்களில் உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து மழை நீரானது, வடிகால் ஓடை வழியாகவும் காட்டு பகுதி களின் வழியாகவும் வந்து கலக்கிறது. மழை காலங்களில் இந்த ஏரி நிரம்பி, இதில் உள்ள வடிகால் மதகு வழியாக மழைநீர் வழிந்து சென்று கொள்ளிடத்தில் கலக்கிறது. இந்த ஏரியின் கரையில் உள்ள இடுகாட்டிற்கு செல்ல, ஏரியின் கரையை பயன்படுத்தி இறந்தவரின் உடலை எடுத்து சென்று வருகின்றனர். இதுகுறித்து கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருட மும் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் மூலம் அப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கையை தெரிவித்து வரு கின்றனர். இந்நிலையில் கழுவந்தோண்டி பள்ளிக் கூடத் தெருவை சேர்ந்த மின்னல்கொடி (65) வியாழனன்று உடல்நலைக் குறைவால் உயி ரிழந்தார். அவரது உடலை மார்பளவு மற்றும் கழுத்தளவு தண்ணீரைக் கொண்டுள்ள ஏரியை தாண்டி உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய பொதுமக்கள் கொண்டு சென்றனர். காலங்காலமாக கழுத்தளவு நீரில் இறங்கி, இறந்தவரின் உடலை சுமந்து செல்வதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதற்காக கழுவந்தோண்டி கிராம மக்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக போராடி யும், இன்றுவரை எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை என வேதனையடைந் துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போ தைய மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து, உடனடியாக பாலம் மற்றும் சாலை அமைத்து தரப்படும் என உறுதி அளித்திருந்த நிலையில், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.