ஜெயங்கொண்டம், பிப்.8 - அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் நகராட்சி 7 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பிரேமாவதி, 5 ஆவது வார்டில் வேட்பாளர் ராதா ஆகியோர் போட்டியிடுகின்றனர். காந்தி பூங்காவில் இவர்களுக்கு மாநில பொதுக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை எம்எல்ஏவுமான எம்.சின்னதுரை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்து 5 மற்றும் 7 ஆவது வார்டு களில் வீடு வீடாக சென்று வாக்காளர் களை சந்தித்து, சுத்தியல், அரிவாள், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோ வன், செயற்குழு உறுப்பினர் கே.மகாரா ஜன், ஜெயங்கொண்டம் ஒன்றிய செய லாளர் வெங்கடாசலம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி, செயற்குழு உறுப்பினர் டி.அம்பிகா, தா. பழூர் ஒன்றிய செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், ஆண்டிமடம் ஒன்றிய செய லாளர் பரமசிவம் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.