அரியலூர், ஜன.24- நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சிக்கான காலக் கெடுவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என அரியலூர் மாவட்ட நுகர் வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “அரியலூர் மாவட் டத்தை நுகர்வோர் பாது காப்பில் முன்னோடி மாவட்டமாக மாற்றும் வகையில், 50 தன்னார்வ லர்களை தேர்வு செய்து நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சியை அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தின் சமரச மையம் நடத்த உள்ளது. விருப்பமுள்ள இளை ஞர்கள், ஓய்வுபெற்ற ஆசிரி யர்கள் மற்றும் அரசு ஊழி யர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், சுயதொழில் புரிபவர்கள் இந்த பயிற் சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி பெற விரும்புவோர் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். ஏற்கனவே எந்த ஒரு தன்னார்வ நிறுவ னத்திலும் நிர்வாக பொறுப் பில் இருக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கப்படும் நபர் களுக்கு கட்டணம் இல்லா மல் பயிற்சி வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு பயிற்சி நடை பெறும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப் படும். பயிற்சியின்போது புதிய நுகர்வோர் பாது காப்பு சட்டம் மற்றும் நுகர் வோர் தொடர்பான இதர சட்டங்கள் மட்டுமின்றி, தகவல் பெறும் உரிமைச் சட்டம், மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், சங்கங் கள் சட்டம் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப் படும். இந்த பயிற்சிக்கு பின்பு சிறந்த நுகர்வோர் பாது காப்பு செயல்பாட்டாளராக விளங்க தேவையான அம்சங் கள் குறித்தும், தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உள்ள அங்கீகாரம் குறித்தும் விவரிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் பயிற்சி பெற விரும்புவ தாகத் தெரிவித்து கடிதம் ஒன்றையும், அதனுடன் கல்வித்தகுதி, தற்போ தைய தொழில், தொடர்பு எண் மற்றும் முகவரி ஆகிய வற்றை, சமரச மையம், மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம், வாலாஜா நகரம், அரியலூர் என்ற முக வரிக்கு சாதாரண அஞ்ச லில் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.