districts

ரத்தசோகை விழிப்புணர்வு

அரியலூர், டிச.7 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சார் நிலா தொடங்கி வைத்தார். ரத்த சோகையினால் ஏற்படும் பாதிப்புகள், ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க பின்பற்ற வேண்டிய உணவு முறைகள், அதற்கான சிகிச்சை  குறித்து விளக்கப்பட்டது. ரத்த சோகையை தடுப்பதற்கான பல்வேறு வழி முறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.