districts

img

செங்கையில் சாலையோர கடைகள் அகற்றம்

செங்கல்பட்டு, ஜூன் 7- செங்கல்பட்டில்  நகர காவல் நிலையம் எதிரே மேட்டு தெரு   மற்றும் கழிவு நீர், மழை நீர் கால்வாய்களை அருகில்  வைக்கப்பட்டிருந்த சுமார் 100 காய்கறி கடைகளை நகராட்சி அதிகாரிகள் செவ்வாயன்று அப்புறப்படுத்தினர்.நகராட்சி ஆணையர் மல்லிகா தலைமையில் ஜே.சி.பி எந்திரம் மூலம் சாலையோரம் இருந்த கடைகளை அகற்றினர். அப்போது சில வியாபாரிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.