districts

img

மாமல்லபுரம் அருகே நகைக்காக முதியோர் கொடூரமாக கொலை

செங்கல்பட்டு,பிப்.17- மாமல்லபுரம் அருகே நகைக்காக வயதான தம்பதியினர் மர்மநபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.  மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலி யில் வசித்து வந்தவர் சகாதேவன் (வயது 87). இவரது மனைவி ஜானகி (83). இவர்கள் அப்பகுதியில் உள்ள 35 சென்ட் முந்திரி காட்டை 50ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து பராமரித்து அங்கேயே  வசித்து வந்தனர். இந்நிலையில் வியாழனறு (பிப்.16) மாலை அருகில் வசிக்கும் அவர்க ளது மகன்  சகாதேவனை பார்க்க வந்தார்.  அப்போது வீட்டின் வெளியே சகாதேவன் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் தவறி கீழே விழுந்து இறந்து  இருக்கலாம் என்று உறவினர்கள் நினைத்த னர். ஆனால் வீட்டில் இருந்த தாய் ஜானகி மாயமாகி இருந்தார். இந்த நிலையில் வெள்ளியன்று காலை முந்திரி தோட்டத்தில் உள்ள முட்புதரில் ஜானகி கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஜானகி அணிந்து இருந்த நகைகள் மாயமாகி இருந்தன. அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. மர்ம கும்பல் வீட்டில் வயதான தம்பதி தனியாக இருப்பதை நோட்டமிட்டு சகாதேவனையும், ஜானகியையும் கொடூரமாக கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. முதலில் சகாதேவனை மர்ம கும்பல் அடித்துக் கொலை செய்து உள்ளனர்.  இதனை கண்ட ஜானகி அவர்களிடம் இருந்து  தப்பித்து ஓடிய போது அவரையும் தாக்கி  கழுத்தை அறுத்து கொன்று விட்டு நகை களை கொள்ளையடித்து உள்ளனர். பின்னர் ஜானகியின் உடலை முட்புதரில் வீசி விட்டு  சென்றதால் அவர் கொலையுண்டது உடனடி யாக தெரியவில்லை. மொத்தம் சுமார் 20 சவரன் நகை கொள்ளை போய் இருப்பதாக  தெரிகிறது.  இது தொடர்பாக தனிப்படை போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.