வேலூர், ஜூலை 21- அம்முண்டியிலுள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-23 அரவையை அக்டோபர் மாதம் துவக்கக் கோரி தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் ஆர்.ஸ்ரீதர் தலை மையில்ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.மாநிலக் குழு உறுப்பினர் சி.பெரு மாள், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ப.சக்திவேல், கரும்பு விவசாயிகள் சங்கத் தின் செயலாளர் ராஜாங்கம், பொருளாளர் ஜி.கண்ணை யன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு மேலாண்மை தனி பொறுப்பு இயக்குநரை நியமிக்க வேண்டும். 2021-22 ஆம் ஆண்டின் அரவையை பருவத்தில் வழங்க வேண்டிய பாக்கி ரூ.22 கோடியை உடனடி யாக வழங்க வேண்டும். 2022-23 அரவையை அக்டோபர் மாதம் துவக்க வேண்டும், ஆலை அரவை பகுதிக்குட்பட்ட அனைத்து கரும்பையும் பதிவு செய்து முறைப்படுத்தி எத்தனால் உற்பத்தி செய்யும் வகை யில் நவீனப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வருவாய் பங்கீட்டு சட்டத்தை நீக்கி பழைய எஸ்ஏபி முறையை சட்ட மாக்க வேண்டும், சர்க்கரை விற்பனையில் கோட்ட முறையை கைவிட வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு மாநில அரசு அறிவித்த ரூ.4000 உடனே வழங்க வேண்டும், காலி இடங்களை நிரந்தர பணி யாளர் கொண்டு நிரப்ப வேண்டும், ஆலையின் வரவு செலவுகளை அர வைக்கு முன் விவசாயி கள் முன் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டன.