districts

img

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிரடி படையுடன் குவிந்த அதிகாரிகள்

வேலூர், ஜூன் 12 -
வேலூர் மாநகராட்சி 59 வது வார்டுக்கு உட்பட்ட கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெருவில் அரசு இடத்தில் சுமார் 45 குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அவர்களை காலி செய்யும்படி கடந்த ஜூன் 10 அன்று மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் நோட்டீஸ் வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது நோட்டீஸ் ஒட்ட வந்த மாநகராட்சி அதிகாரிக ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அவர்கள்  திரும்பிச் சென்றனர்.

இதனையடுத்து புதனன்று ( ஜூன் 12) கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் உள்ள 45 வீடுகளை இடிக்க மாநக ராட்சி, வருவாய் துறை அதிகாரிகள் காவல் அதிரடிப்படையினர் பாதுகாப்புடன்  இடிக்க முயன்றனர். அப்பொழுது ஜேசிபி வாகனத்தை முற்றுகையிட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மக்கள் தர்ணா வில் ஈடுபட்டனர்.

மேலும் தங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை வீடுகளை இடிக்க விட மாட்டோம் என கதறிய மக்கள் வீடுகளுக் குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அதிகாரிகள் திருப்பி சென்றனர்.