districts

img

மின்சாரத்தில் இயங்கும் பந்தயக்கார்: விஐடியில் தயாரிப்பு

வேலூர், மே 18- விஐடி இயந்திரவியல் துறை சார்பில் புதிய வகை நான்கு சக்கர வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்த நான்கு சக்கர வாகனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பந்தயத்தில் பயன்படுத்தக்கூடிய பிரிவைச் சார்ந்ததாகும்.  பொதுவாக பந்தயத்தில் பயன்படுத் தக்கூடிய கார், பெட்ரோலின் தேவை அதிகமாக இருக்கும். ஆனால் விஐடியில் உருவாக்கப்பட்ட இந்த மின்சார கார் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எதிர்வரும் காலங்களில் பெட்ரோல் வாகனத்திற்கு பதிலாக மின்சார வாகனம் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டுதான் விஐடியில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை விஐடி வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் பாராட்டினார். அப்போது துணைத் தலைவர் டாக்டர் சேகர் விசுவநாதன், துணை வேந்தர் டாக்டர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் டாக்டர்.எஸ் நாராயணன் ஆகி யோர் உடனிருந்தனர். தற்போது பந்தயத்திற்காக மட்டும் உருவாக்கப்பட்டுள்ள இந்த  கார், எதிர்காலத்தில் மக்கள் பயன்படுத் தக்கூடிய வகையிலும் உருவாக்கப் படும்.

அதற்குண்டான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக தலைமை ஆராய்ச்சியாளர் பேராசிரி யர் தூண்டில் கருப்பராஜ் கூறியுள்ளார். மக்கள் பயன்படுத்த கூடிய வகை யில் உருவாக்கப்பட உள்ள மின்சார காரின் விலை 2.5 முதல் 3.5 லட்சம் ரூபாய் வரையில் இருக்கக்கூடும் என்றார்.  மேலும் இந்த மின்சார கார் சூரிய  மின் சக்தியில் இயங்கக்கூடிய வகையில்  ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் வாகனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது என்றார். இதனால் வாகன விபத்துகளை நாம்  பெருமளவு குறைக்கலாம். இங்கி லாந்தில் உள்ள லவ்பரோ பல்கலைக் கழகத்துடன் இணைந்து வாகன ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரபல ஆட்டோ மொபைல் நிறுவனமான வேலியோவும் இந்த ஆராய்ச்சியில் விஐடியுடன் இணைந் துள்ளது. இதுகுறித்த சர்வதேச கருத்தரங்கம் விரைவில் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இக்கருத்தரங்கில் பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகளும் பெரு நிறுவன ஆராய்ச்சியாளர்கள்,  நிர்வாகிகள் பங்கு பெற உள்ளனர். இந்த ஆராய்ச்சியில் பேராசிரியர் டெனிஸ் அசோக், இளங் கோவன் மற்றும் மாணவர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.